புராண கதைகளில் சூரபன்மனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பரமேஸ்வரனிடம் முறையிடுகின்றனர் . அவரும் தேவர் துயர் தீர்க்க பரமேஸ்வரன் தான் ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார் . இந்த வாக்கைக் காப்பாற்றத்தான் ஐந்து திருமுகங்களோடு அதோமுகமும் கொள்கிறார் எம் பெருமான் , ஆறு திருமுகங்களிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களினின்றும் ஆறு பொறிகள் கிளம்புகின்றன . அந்தப் பொறிகளை வாயுவும் அக்கினியும் ஏந்திவந்து சரவணப் பொய்கையில் சேர்த்து விடுகின்றனர் . அப்பொய்கையில் பூத்த ஆறு தாமரை மலர்களில் இந்தப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறுகின்றன . இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கின்றனர் . இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கை வருகிறார். அம்மை , குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து தன் மார்பகத்தில் அணைக்கிறாள். ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறார்கள்.
அவனே கந்தன் என்றும் ஆறுமுகம் என்றும் அழைக்கப்படுகிறான் " என்று முருகன் திரு அவதாரக் கதை
அருவமும் உருவம் ஆகி
அனாதியாய் , பலவாய் , ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஞானம் , வைராக்கியம் , வீரியம் , ஐசுவரியம் , கீர்த்தி , அறம் , ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவான் .
இந்த ஆறினுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக ஒருவனுக்கு அமைந்துவிடுமானால் அவனே பெருமகன் ஆகிவிடுகிறான் . ஆறும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் குடியிருக்குமானால் அவன் கடவுளே ஆகிவிடுகிறான்
" இப்படி எண்ணியிருக்கிறான் தமிழன் அப்படி தமிழன் கற்பனை பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன் "
இவ்வளவுதானா ? இல்லை . இன்னும் பேரொளி படைத்தவன் , அடியார்க்கு எளியவன் , வேள்விக் காவலன் , ஞானபண்டிதன் , வீரப்பெருமகன் , இன்பத் தலைவன் எல்லாம் அவனே என்று காட்டவே அவனுக்கு ஆறு திருமுகங்களைக் கற்பனை பண்ணியிருக்கிறான் ” என்றெல்லாம் அறுமாமுகவனுக்கு விளக்கம் இந்தப் பௌதிக உலகம் பரம்பொருளின் ஸ்தூல தோற்றமே . பரம்பொருளைக் காரண வஸ்து என்றால் இந்த உலகைக் காரியவஸ்து என்று வைத்துக் கொள்ளலாம் தானே . இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது .
இந்தப் பூதப் பொருள்களைப் பகுத்துக் கொண்டே போனால் பகுக்க முடியாத ஒரு நிலையில் அதனை அணு என்கிறோம் . அந்த அணு . இயங்கும் போது புரோட்டான் , எலக்ட்ரான் என்று இரண்டு வடிவங்கள் எடுக்கின்றன . புரோட்டான் அசையாது நிலைத்து நிற்கிறது அதைச் சுற்றி சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்கின்றன .
அத்தகைய பூதப்பொருள்களில் கரி ( carbon ) என்பது ஒன்று . அதில் புரோட்டான் ஒன்றும் எலக்ட்ரான் ஆறும் இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள் . இந்த எலக்ட்ரான் எண்ணிக்கையில் ஆறுக்கு அதிமாகப் போய்விட்டாலும் , குறைவாய்ப் போய்விட்டாலும் உயிர்த் தத்துவத்தை ஊட்டும் சக்தியை அது இழந்துவிடுகிறது .
கரியில் ஆறு எலக்ட்ரான் சேர்ந்திருக்கிறது . உயிர்த் தத்துவத்தை வளர்க்கும் நடைமுறையை விளக்கவே ஆறு கார்த்திகைப் பெண்களால் இறைவனாம் முருகன் வளர்க்கப்பட்டான் என்று உருவகப்படுத்தியிருக்கின்றனர் . ஆறு பெண்கள் வளர்த்த ஆறு பிள்ளைகளையும் இணைத்தே ஓர் அறுமாமுகனை உருவாக்குகிறாள் உலகெலம் புகழ்கின்ற அன்னை உமை . இப்படி ஆறுமுகமான பொருளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதுதான் அருணகிரியார் பாடிய பாடல் ஞாபகத்துக்கு வந்தது . ஆம் எல்லோருக்கும் தெரிந்த அந்த திருப்புகழ்தான் .
ஏறுமயிலெறி விளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே .